கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறிப்பு
தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தொண்டமாங்கினம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (28). இவர் தனது பைக்கில் நேற்று தோகைமலை யூனியன் ஆபீஸ் அருகே சென்றுள்ளார். அப்போது சுக்காம்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1000 பிடுங்கி, ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன் உயிரோடு விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளார். தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.
Next Story