தொகுதிக்கு 10,000-பேரை மாநாட்டுக்கு அழைத்து வர தயார்- த.வெ.க.மாவட்டத் தலைவர் மதியழகன் பேட்டி.

தொகுதிக்கு 10,000-பேரை மாநாட்டுக்கு அழைத்து வர தயார்- த.வெ.க.மாவட்டத் தலைவர் மதியழகன் பேட்டி.்
தொகுதிக்கு 10,000-பேரை மாநாட்டுக்கு அழைத்து வர தயார்- த.வெ.க.மாவட்டத் தலைவர் மதியழகன் பேட்டி. தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ததற்கு, தேர்தல் ஆணையம் தற்போது அங்கீகாரம் செய்துள்ளது. இது தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவருமான விஜய் தமிழகத்தில் உள்ள தமது இயக்கத்தினருக்கு கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளதை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் ,இடிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கரூரிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நிறைவு பெற்ற பிறகு, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கரூர் மாவட்டத் தலைவர் மதியழகன், எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது குறித்து கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் முதல் மாநில மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கரூர் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் மாநாட்டுக்கு செல்ல இப்போதே தயார் நிலையில் உள்ளனர். ஆனால், மாநில மாநாட்டில் பாதுகாப்பு கருதி தலைமை எவ்வளவு நபர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்துகிறார்களோ, அதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம் என்றார்.
Next Story