ஆடி வெள்ளி முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 100008 வளையல் அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..

ஆடி வெள்ளி முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 100008 வளையல் அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு தினம் தோறும் பல்வேறு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆடி இராண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் ஏராளமான வளையல்களை கோவில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் நிர்வாகம் சார்பாக ஒரு லட்சத்தி எட்டு வளையல்களை மாலையாக அம்மனுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் , ஆண்கள் நிண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கூல், மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story