சேலத்தில் பதிவான 103.6 டிகிரி வெயிலால்

X

பொதுமக்கள் கடும் அவதி
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். சேலத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதிய வேளையில் சாலையில் அனல் காற்று வீசுகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் வெயிலின் அளவு 103.3 டிகிரியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இதனால் வெயிலின் அளவு 103.6 டிகிாிஆக பதிவாகி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சாலையோரத்தில் ஆங்காங்கே பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி, கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் அதை வாங்கி பருகி வருகின்றனர். வெயிலினால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். சேலத்தில் 2 நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
Next Story