தொட்டிப்பட்டி சாய் பாபா கோவிலில் 106 ஆண்டு சாய் குரு பூஜை.

தொட்டிப்பட்டி சாய் பாபா கோவிலில் 106 ஆண்டு சாய் குரு பூஜை விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர், அக்.13- நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் சனிக்கிழமை ஸ்ரீ சாயி குருபூஜை 106-ஆம் ஆண்டு விழா, விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  கீரம்பூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி குருபூஜை 106-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் கூட்டுப் பிராத்தனை, ஆரத்தி, தரிசனம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் கோவை துவாரகாமாயி குருஸ்தான் சார்பில் பாபா நூற்றாண்டு தின வஸ்த்திரம், சட்கா, ஷிம்டா, பாத தரிசனம் ஆகியவை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ வித்தியா ஆரம்பமும்,  ஸ்ரீ சாயி சத்சரிதம் பாராயணமும் நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர். ஸ்ரீ சாயி திருவுளப்படி, சாய் தபோவனம் சார்பில்  விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story