சேத்துப்பட்டு பசுபதி ஈஸ்வரர் மாசி மகம் 108 குடம் வில்வ அபிஷேகம்.

X

சேத்துப்பட்டு பழம்பேட்டை அருள்மிகு உமா பார்வதி சமேத பசுபதி ஈஸ்வரர் சிவாலயத்தில் மாசி மகம் முன்னிட்டு 108 வில்வகுட அபிஷேகத்தில்அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு பசுபதீஸ்வரர் அருள் பாலித்தார்
ஆரணி சேத்துப்பட்டு பழம் பேட்டை உமா பார்வதி சமேத பசுபதி ஈஸ்வரர் சிவாலயத்தில் மாசி மகம் 108 வில்வகுடம்அபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு பழம்பேட்டை வந்தவாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ உமாபார்வதி சமேத பசுபதி ஈஸ்வரர் சிவாலயத்தில் மாசி மகம் முன்னிட்டு 108 வில்வ குடம்அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து பசுபதி ஈஸ்வரர் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story