இரவு 11 மணிக்கு மேல் தனியார் மதுபாரில் அதிக விலைக்கு மது விற்பனை

இரவு 11 மணிக்கு மேல் தனியார் மதுபாரில் அதிக விலைக்கு மது விற்பனை
போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பாரில், கேட்டை இழுத்து மூடி விட்டு, அதிக விலைக்கு மது விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் கண்டும் காணாமலும் செல்வதால், இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் மதுவை குடித்துவிட்டு மது பிரியர்கள் அட்டகாசம் செய்து வருவதால் பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய அறிவுரை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story