சூதாடிய 11 பேர் கைது இரண்டு லட்சம் பறிமுதல்!
Pudukkottai King 24x7 |31 Aug 2024 3:33 AM GMT
குற்றச்செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.கந்தர்வகோட்டை அருகே காட்டு நாவல் கிராமத்தில் உள்ள குளக்கரையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கந்தர்வகோட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது.இதன்பேரில், ஆய்வாளர் சார்பு-காவல் வீரபாண்டியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூதாடிய கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம், விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரவிக்குமார் (35),மேலட்டிராயன்விடுதியைச்சேர்ந்த ராமசாமி மகன் பாஸ்கர் (35) உள்ளிட்ட 11 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 2 லட்சத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
Next Story