விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி பணிக்கு 11 திட்டங்களை அறிவித்த முதல்வர்

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி பணிக்கு 11 திட்டங்களை அறிவித்த முதல்வர்
X
மாவட்ட வளர்ச்சி பணிக்கு 11 திட்டங்களை அறிவித்த முதல்வர்
விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சிக்கு பங்கேற்க வருகை புரிந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வளர்ச்சி திட்டங்களுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார் 1. சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டுக்கால்வாயை அமைக்க வேண்டும் என்று செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், பெண்ணாத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதி உழவர் பெருமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.304 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 2. விழுப்புரம் வட்டத்தில் கடந்த ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு வெள்ளத்தால் சேதம் அடைந்த தளவானூர் அணைக்கட்டு ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். 3. கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வருதாவூர் அருகில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும். 4. காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் இருக்கும் 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 5. விக்கிரவாண்டி பேரூராட்சி கக்கன் நகரில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்கப்படும். 6. செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். 7. திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் சமையற்கூடம் மற்றும் உணவருந்தும் இடம் ஆகியவை கட்டப்படும். 8. விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலமேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்கப்படும். 9. விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் டவுன்ஹால் ஆக மாற்றப்படும். 10. தென்னமாதேவி அயனம்பாளையம் கிராமங்களில் பம்பை ஆற்றின் வடகறையில் சங்க கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 11. வீடூர் முதல் பாதிரியாபுலியூர் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையாக மாற்றப்படும்.
Next Story