ராமநாதபுரம் 11 மீனவர்கள் விடுதலை

பிரதமரின் இலங்கை பயணம்: 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுதலை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று மீனவர்களை 27ஆம் தேதி இலங்கை கடற்படையினால் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டிருந்த 11 மீனவர்களின் வழக்கு வரும் 9ந்தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று இலங்கை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் மீனவர்களின் இழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் வழக்கு விசாரித்து மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் பிரதமர் இன்று மாலை இலங்கை செல்ல உள்ளதையடுத்து மீன்வளத் துறையினர் தாமாக முன்வந்து ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்திருப்பதாக விடுதலை தகவல்கள் வெளியாகி உள்ளது
Next Story