பழையகோட்டையில் ரூ 11 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

X
நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை மாட்டு தாவணியில் காங்கேயம் இன மாட்டு சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது| வழக்கம். அதன்படி நேற்று நடை பெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் இன மயிலை, செவலை பசு மாடுகள், பூச்சி காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 43 மாடுகள், கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த சந்தையில் அதிகபட்சமாக காளை கன்றுடன் காங்கேயம் இன மயிலை பசு மாடு ரூ.79 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 26 காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட் டது.
Next Story

