கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 11ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தகவல்.

கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 11ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தகவல்.
கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 11ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தகவல். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம் வரும் 11ஆம் தேதி கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்புதல் பெறுதல் , பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம பஞ்சாயத்து தணிக்கை அறிக்கை , ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் , கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ,சபாசார் செயலி செயல்பாடு உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story