சேவல் சண்டை சூதாட்டம் ஆடிய நபர்கள் தப்பி ஓட்டம், 11 டூவீலர்கள் போலீசார் பறிமுதல்

X
Komarapalayam King 24x7 |16 Jan 2026 8:25 PM ISTகுமாரபாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் ஆடிய நபர்கள் தப்பி ஓட்டம், 11 டூவீலர்கள் போலீசார் பறிமுதல்
குமாரபாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் ஆடிய நபர்கள் தப்பி ஓடிய நிலையில், 11 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குமாரபாளையம் அருகே நேரு நகர் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேரில் சென்றதும், அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். அங்கிருந்த 11 டூவீலர்களை பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
