ஆத்தூர் பிரிவு ரூ.11,000- மதிப்புள்ள 1,100 கிராம் கஞ்சாவை பதுக்கிய மூன்று இளைஞர்கள் கைது.

ஆத்தூர் பிரிவு ரூ.11,000- மதிப்புள்ள 1,100 கிராம் கஞ்சாவை பதுக்கிய மூன்று இளைஞர்கள் கைது.
ஆத்தூர் பிரிவு ரூ.11,000- மதிப்புள்ள 1,100 கிராம் கஞ்சாவை பதுக்கிய மூன்று இளைஞர்கள் கைது. கரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆத்தூர் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் திருச்சி புங்கனூர் கீழத் தெருவை சேர்ந்த ஜெகநாதன் வயது 24, கரூர் மேட்டு தெருவை சேர்ந்த நூர்முகமது வயது 19, கரூர் சின்னாண்டாங் கோயில் தெருவை சேர்ந்த முத்து பாலாஜி வயது 20 ஆகிய மூன்று பேரையும் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்த போது, ரூபாய் 11 ஆயிரம் மதிப்புள்ள 1100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story