அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு: ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு: ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் கீதா ஜீவன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு இரு தரப்பினர் ஆஜராகாத நிலையில் வருகிற வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாகலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது . இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இ

வ்வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது இதன் காரணமாக இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்தது இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்டத்தை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது , இவ்வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார்.

June 12வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகவில்லை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் அதன் வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார் இதை எடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

Tags

Next Story