பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.12 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

X
நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்தியேக வாரச்சந்தை நடைபெற்று வருகின்றது. இதில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மயிலை, செவலை மாடுகள், காரி, பூச்சி மாடுகள், இளம் கன்றுகள் என மொத்தம் 60 காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 33 காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Next Story

