சேலம் மாவட்டத்தில் கஞ்சா, மது, விற்ற 12 பேர் கைது

X
சேலம் செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். கருங்கல்பட்டி, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் கஞ்சா விற்ற ஈஸ்வரமூர்த்தி (வயது 23), சதீஷ்குமார் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சேலம் மதுவிலக்கு போலீசார் ரெட்டியூர், மல்லமூப்பம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அழகாபுரத்தை சேர்ந்த சுவர்ணம் (58), சூரமங்கலம் லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோன்று கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற மாதேஷ் (66) என்பவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. ஓமலூர் போலீசார் பெரமச்சூர்், காமலாபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற புளியம்பட்டி விஜயகுமார்(47), திருச்சி மணசூலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(66) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

