கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு 12 வருடம் சிறை தண்டனை

X
மதுரை நகர் கீரைத்துறை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2024ம் ஆண்டு தொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் (105/2024), வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பாண்டியராஜன், ஜாக்கி(எ)பிரசாந்த் மற்றும் சரண்யா ஆகியோருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் கஞ்சா கடத்தியதற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 1,00,000 அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினரை மாநகர காவல் சார்பாக, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Next Story

