கடம்பூரில் பைக்க்கில் 120 பாட்டில் மது கடத்தி வந்தவர் கைது

கடம்பூரில் பைக்க்கில் 120 பாட்டில் மது கடத்தி வந்தவர் கைது
கடம்பூரில் பைக்க்கில் 120 பாட்டில் மது கடத்தி வந்தவர் கைது கடம்பூர் பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து அதிகளவு மதுபான பாட்டில்கள் வாங்கி இரண்டு பேர் பைக்கில் எடுத்து செல்வதாக கடம்பூர் போலீசார்க்கு கிடைத்த தகவலின் பேரில் இருட்டிபாளையம் பவளக்குட்டை பிரிவில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்த போது பைக்கின் மறைவான இடத்தில் 120 பாட்டில் மதுபானம் இருந்ததை பறிமுதல் செய்தனர். இருவரிடம் விசாரணை நடத்தியதில் கடம்பூர் பசுவணாபுரத்தை சேர்ந்த பசுவராஜ் (33), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (36) என தெரியவந்தது. இருவரையும் கடம்பூர் போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story