திருப்பூர், திருமுருகன்பூண்டியில் தியாகி திருப்பூர் குமரன் 121-வது பிறந்தநாள் விழா!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் தியாகி திருப்பூர் குமரன் 121-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருமுருகன்பூண்டியில் தியாகி திருப்பூர் குமரன் 121-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் தியாகி திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை சார்பில் தியாகி திருப்பூர் குமரனின் 121 வது பிறந்தநாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் திருமுருகன்பூண்டி நகர் மன்ற தலைவர் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முன்னதாக தியாகி திருப்பூர் குமரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு விழா தொடங்கியது. விழாவில் மாநகராட்சி மேயர் தியாகி திருப்பூர் குமரனின் தியாகம் பாராட்டுகளுக்குரியது போற்றுதலுக்குரியது என்றும் கைத்தறி நெசவாளர்களின் ஆதாரமான பாவடி நிலங்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் தமிழக அரசின் துணையுடன் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூட்டத்தில் பேசினார்.விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Next Story