திமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 13 பெண்களும்பாதிக்கப்படுகின்றனர்.என் திமுக மீதும் கட்சியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்

திமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 13 பெண்களும்பாதிக்கப்படுகின்றனர்.என் திமுக மீதும் கட்சியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்
X
திமுக ஆட்சிக் காலத்துல பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கடந்த 4 வருடங்களில் மட்டும் 18,518 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது.இந்த கணக்கு படிவருடத்திற்கு 4500 பேரும், நாள் ஒன்றுக்கு 13 பெண்களும்பாதிக்கப்படுகின்றனர்.என் திமுக மீதும் கட்சியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை விந்தியா திமுக ஆட்சிக் காலத்துல பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கடந்த 4 வருடங்களில் மட்டும் 18,518 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது.இந்த கணக்கு படிவருடத்திற்கு 4500 பேரும், நாள் ஒன்றுக்கு 13 பெண்களும்பாதிக்கப்படுகின்றனர்.என் திமுக மீதும் கட்சியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மற்றும் தெற்கு நகர கழகம் சார்பாக ஜவகர் மைதானத்தில் வைத்து பொன்மனச் செம்மல் டாக்டர். எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம். தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா. சிறப்புரையாடினார்கள்.மாநில எம்.ஜி. ஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ். மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர். மாவட்ட.நகர.ஒன்றிய வார்டு கிளைச் செயலாளர்கள் ஏராளமானபொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடிகை விந்தியா பேசும் போது, 100 கோடி ஊதியம் வாங்குபவர்கள் அவர்களின் சொகுசு காருக்கு வரி கட்டாமல் சலுகை எதிர்பார்க்கும் போது, சம்பாதித்த மொத்த பணத்தையும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். சொகுசு காரில் குடும்பத்துடன் செல்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என காவல் துறையினர் நம்புவதை போல, ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து விதவிதமான விளம்பரங்கள் தந்ததால் மக்கள் நம்பி ஏமாந்து விட்டனர். பிக் பாஸ் வீட்டில் கூட 6 அயோக்கியர்கள் இருப்பார்கள். ஆனால் திமுகவில் ஒட்டு மொத்தமாகஅனைவரும் அயோக்கியர்கள். போதையின் பாதையில் செல்ல வேண்டாம் இளைஞர்களே என்ற ஸ்டாலின் விளம்பரத்தை பார்க்கும் போது, சிவராஜ் சித்த வைத்திய சாலை விளம்பரம் நினைவுக்கு வருகிறது. இப்படி பேசுவது ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா. கருணை பற்றி கசாப்பு கடைகாரன் பேசுவது போல் இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை முடிந்தவுடன்இன்றைக்கு 400 கோடி சரக்கு வித்தது இன்று 500 கோடிக்கு சரக்கு வித்தது. என பேப்பர்ல பெருமை பிடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம். நாடு அந்தளவுக்கு கெட்ட நாசமா போகுது. போதையில்லா தமிழகம் என அவங்க விளம்பரம் தராங்க என போதை பொருள் லிஸ்ட்ல சாராயத்தை எடுத்துட்டாங்களா பார்த்து மக்களை அடுத்து தேர்தல்ல ரேஷன் கடையில குவாட்டர் தருவோம் என்று சொல்லுவாங்க மக்களே திருட்டு பசங்க அவங்கள நம்பாதீங்க. ஓட்டு போட்டா ஆயிரம் தருவாங்க சொல்லி பெண்களை ஏமாத்திட்டாங்க உங்களுக்கு நிறைவேற்றாத வாக்குறுதி கொடுத்தாங்க ஆயிரம் ரூபாய் கொடுத்தா போதும் இவங்க என்ன வேணா செய்யலாம். இவங்கள நம்பாதீங்க விடியில் ஆட்சிக்கும் வெத்து விளம்பரத்துக்கும் ஸ்டாலினுடன் விற்க்கும் கொஞ்ச நாள்ல வேலையில்லாத போயிரும் என்று கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக உள்ளே வந்து விடும் என திமுகவினர் மக்களிடம் பயமுறுத்தி வாக்கு பெற்றனர். இனி அது போல் நடக்காது. சொல்வதற்கும் சாதனை கிடையாது. அதிமுகவை பாஜக பி டீம் என திமுகவினர் சொல்லி வந்தனர். ஆனால் கருணாநிதி படத்தை திறந்தது ராம்நாத் கோவிந்த். கருணாநிதி சிலை திறந்தது வெங்கய்ய நாயுடு. கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டது ராஜ்நாத் சிங். இதையெல்லாம் பார்க்கும் போது திமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜக பி டீமாக மட்டுமின்றி பீப்பீ டீமாகவும் இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் அப்படி வச்சுக்கலையே எல்லா பணத்தையும் சுரண்டி குடும்பத்துக்கு சொத்து சொத்து தமிழக மக்களை மட்டும் இலவசம் இயங்க வைத்து வச்சுக்கிட்டு இருக்காங்க இதெல்லாம் ஒரு ஆட்சியா இது வெறும் காட்சி வெத்து விளம்பரம் ஆட்சி விடியாத ஆட்சி வெட்கப்பட வேண்டிய ஆட்சி வேதனைப்பட வேண்டிய ஆட்சி பெண்கள் கெடுக்கப்படும் ஆட்சி கேள்வி கேட்டா ஒடுக்கப்படும் ஆட்சி ஒரு பைசாக்கு பிரயோஜனம் இல்லாத ஆட்சி வெத்து விளம்பராட்சி பால் விலையில் இருந்து பருப்பு விலை வரையும் ஏத்திவிட்டு தமிழக அரசாங்கம் 8 கோடி கடன் வாங்கிட்டு தமிழக மக்களுக்கு என்னையா செஞ்சீங்க கேட்டா இந்த அமைச்சரும் வாயைத் திறக்க மாட்டாங்க . ஆண் கல்லூரிக்கு சென்றால் கல்வி புரட்சி. பெண் கல்லூரிக்கு சென்றால் சமூக புரட்சி. திமுக காரன் கல்லூரிக்கு சென்றால் அது பாலியல் வன்புணர்ச்சி. எதிர்த்து போராட எதிர்க்கட்சிக்கும் அனுமதி கிடையாது வரலாறு சிறப்புமிக்க கல்லூரியில் அங்கு படிக்கின்ற மாணவியை பலாக்காரம் . அந்த அநியாயத்தை தட்டிக் கேட்க அனுமதி இல்லை சக மாணவிக்கு நடந்த கொடுமையை தட்டி கேக்குறதுக்கும் நியாயத்தை கேட்பதற்கு மாணவர்கள் போராட்ட நினைக்கிறாங்க அவங்களுக்கு அனுமதி இல்லை கல்லூரியில் சிசிடிவி இல்ல போதுமான பாதுகாப்பு இல்லை . திமுக ஆட்சிக் காலத்துல பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கடந்த 4 வருடங்களில் மட்டும் 18,518 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது என 10 தினங்களுக்கு முன் தெரிய வந்தது. இந்த 10 தினங்களில் எத்தனை என தெரியவில்லை. இந்த கணக்கு படி வருடத்திற்கு 4500 பேரும், நாள் ஒன்றுக்கு 13 பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில் இதில் பதிவான வழக்குகளில் 50 விழுக்காடு குற்றவாளிகள் திமுகவை சேர்ந்தவர்கள். முதல்வரின் குடும்பத்திற்கு முறை வாசல் செய்வதற்காக அரசு அதிகாரிகள் துடிக்கின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியில் ஆட்சியரை அமைச்சர் அதட்டி எழுப்புகிறார். திமுகவினர் சமூக நீதி பகுத்தறிவு என கூறிக் கொண்டு பெரியார், அண்ணா சமாதி பக்கம் சென்றால், அவர்கள் பேயாக வந்து செவிலில் அடிப்பார்கள். வெண்டக்கா, சுண்டக்கா, வெள்ளரிக்கா, வௌங்கவே வௌங்காது திமுக என பெரியவர்கள் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக சொல்லி வைத்துள்ளனர். தி என்றால் திருட்டு தனம், மு என்றால் முட்டாள் தனம், க என்றால் களவாணித் தனம். இது இன்றைய திமுகவுக்கு சரியாக பொருந்தும். என்றார். ஸ்டாலின் திருவள்ளுவர் வச்சு அரசியல் பண்ணனும் நினைக்கிறாரு திருவள்ளுவர் கொண்டாடனும் தமிழகம் ஸ்டாலின் சொல்றாரு ஸ்டாலினுக்கு தெரியுமா தெரியாதா திருவள்ளுவர் தினம் என்று அறிவிச்சதை புரட்சித்தலைவர் திருவள்ளுவர் வச்சு விளம்பரம் அப்புறம் கொடுக்கலாம் திருவள்ளுவர் சொன்ன மாதிரி ஆட்சி பண்ண முயற்சி பண்ணுங்க. தமிழகம் எப்படி இருக்கு எந்திர பொம்மை முதல்வர் இலவச இணைப்பா துணை முதல்வர் எதெல்லாம் திருடலாம் துடிக்கிற சட்டமன்றஉறுப்பினர்கள் எது வேணும்னாலும் திருடலாம் அலையற அமைச்சர்கள் தட்டி கேட்டா குண்டாசு தூக்கி போடறதுக்கு வேலை பார்க்கிற காவல்துறை காய்கறி விற்பனை செய்யக்கூடிய கமிஷன் அடிக்க கவுன்சிலர் கண்ணுக்கு தெரிய பொண்ணுகளெல்லாம் கெடுக்கணும் நினைக்கிற திமுக கரவெட்டிகள் ஜாதி வெறி பிடிச்ச திமுக நிர்வாகிகள் எலக்சன் வந்தபோது மட்டும் மக்களை மட்டும் யோசிப்பும் திமிரு பிடிச்சு பேசும் துரை முருகன்கள் ஓட்டு போட்ட பெண்கள் எல்லாம் ஓசி டிக்கெட்டு கேலி பேசுற பொன்முடி ஜல்லிக்கட்டில் ஜாதி பார்க்கிற மூர்த்திகள் என்று நடிகை விந்தியா பேசினார்.
Next Story