அரக்கோணம்: வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

X
அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சி கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வைத்தீஸ்வரி (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செல்வராஜ் வழக்கம்போல் கடைக்கும், அவரது மனைவி வைத்தீஸ்வரி வேலைக்கும் சென்றுள்ளனர். இந்தநிலையில், வைத்தீஸ்வரி வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப் பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

