உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 13.09.2025

உணவுப்பொருள் வழங்கல்  சம்மந்தமான  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 13.09.2025
X
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்கு எளம்பலூர் ஊராட்சியிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு வெங்கலம் (மேற்கு) ஊராட்சியிலும், குன்னம் வட்டத்திற்கு காடூர் (வடக்கு) ஊராட்சியிலும், ,ஆலத்தூர் வட்டத்திற்கு சிறுவயலூர் ஊராட்சியிலும் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 13.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி. தகவல். பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், எளம்பலூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பெரம்பலூர், ந.சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம்(மேற்கு) கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பெரம்பலூர், வி.வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், காடூர்(வடக்கு) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர், பெரம்பலூர், தி.புவனேஷ்வரி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், சிறுவயலூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், பெரம்பலூர், ரெ.சுரேஷ்குமார் தலைமையிலும் 13.09.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தெரிவித்துள்ளார்.
Next Story