பரமத்தி வேலூரில் 133 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு.

பரமத்தி வேலூரில் 133 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு.
X
பரமத்தி வேலூரில் 133 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பொதுமக்கள்.
பரமத்தி வேலூர், ஆக. 28:  பரமத்தி வேலூர் பகுதியில் 133 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பரமத்தி வேலூரில் 12 அடி உயரமுள்ள பஞ்ச முக ஹேரம்ப மகா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பேட்டை பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி தனபூஜை,முன்னதாக சுமங்கலிபூஜை,மகா தீபாராதனை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல பொத்தனூர் வெங்கமேடு வல்லப கணபதி, வேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், வேலூர் காவிரிக் கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள சக்தி விநாயகர், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். மேலும் இந்து முன்னணி சார்பில் பரமத்தி வேலூர் வட்டத்தில் வேலூர், பொத்தனூர், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, குப்புச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 65 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் கோபிநாத் தெரிவித்தார்.
Next Story