திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 14மாடுகள் பிடிப்பு

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 14மாடுகள் பிடிப்பு

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகள் பிடிக்கப்பட்டன.

திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது .

இதனைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சி ஆணையர் உத்தரவின்படி திருவாரூர் நகர் பகுதியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர். ஒரே நாளில் மட்டும் 14 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளது .

Tags

Next Story