தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 143 கிலோ பறிமுதல் செய்து இரண்டு நபர்கள் கைது!
Pudukkottai King 24x7 |29 Aug 2024 5:25 AM GMT
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 143 கிலோ பறிமுதல் செய்து இரண்டு நபர்கள் கைது.தமிழகம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை அரசால் மிகத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது அறந்தாங்கி, குருந்திரக்கோட்டை பகுதியில் ரவிக்குமார் (35)சுந்தர்ராஜ்(25) ஆகிய இருவரிடமிருந்து சுமார் 143 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் இதனுடைய மதிப்பு 23,740 ரூபாய் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Next Story