மாரியம்மன் கோவிலுக்கு 15 கிலோ எடையுள்ள வெள்ளி கவசங்கள்

மதுரை அவனியாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு 15 கிலோ எடையுள்ள வெள்ளி கவசங்கள் வழங்கப்பட்டன.
மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி சாலையில் 300 ஆண்டுகள் பழமையான ஆண்டாள் மாரியம்மன் கோவிலில் நேற்று (செப்.14)பிச்சைக்கனி நாடார் குடும்பத்தினர் சார்பாக சுமார் 15 கிலோ எடையுள்ள ரூபாய் 16 லட்சம் மதிப்பு உள்ள வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. முன்னதாக வெள்ளிக்கவசம் அயன் பாப்பாக்குடி அய்யனார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்து. அதனை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்ற பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story