மோகனூர் அருகே 1500 பனை விதைகள் நடும் விழாவை நாமக்கல் MP மாதேஸ்வரன் தொடங்கி வைத்தார்!

மோகனூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்றது, இந்த விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி பதவியேற்று நூறாவது நாள் விழாவின் தொடர்ச்சியாக பரளி மற்றும் செவிட்டுரங்கன்பட்டியில்1500 பனை விதைகள் நடும் விழா மோகனூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்றது, இந்த விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும், திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் பழனிமலை, மோகனூர் நகர செயலாளர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார்,வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி,தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்,மகளிர் அணி நிர்வாகிகள் சுதா , பிரேமலதா, வனிதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story