மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் தவெக மாலை அணிவித்து மரியாதை
Rasipuram King 24x7 |2 Oct 2024 2:54 PM GMT
மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் தவெக மாலை அணிவித்து மரியாதை
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் மகாத்மா காந்தி அவர்களின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு இராசிபுரம் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இராசிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேலுபிரபாகரன், முன்னிலை வகித்தார் .ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து ஊராட்சி நிர்வாகிகள், பிள்ளாநல்லூர் பேரூர் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story