கரூர் மாவட்டத்தில் 157 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 157 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 81 மில்லி மீட்டர் அணைப்பாளையத்திலும் 76 மில்லி மீட்டர் க. பரமத்தியிலும் பெய்துள்ளது.இரண்டு இடங்களிலும் மொத்தம் 157 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு13.08மில்லி மீட்டர் எனும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
Next Story




