இராசி அகரம் மகளிர் மன்றத்தின் சார்பில் 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை..
Rasipuram King 24x7 |26 July 2024 1:49 PM GMT
இராசி அகரம் மகளிர் மன்றத்தின் சார்பில் 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை..
இராசி அகரம் மகளிர் மன்றத்தின் சார்பில் 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இராசி அகரம் மகளிர் மன்றத்தின் சார்பில் அகரம் நகரில் அமைந்துள்ள புதிய அகர மஹாலில் 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது . முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகள் மந்திரங்கள் வாசித்து திருவிளக்கேற்றி சுமங்கலி பெண்கள் அம்மனை வழிபட்டனர். இந்த திருவிளக்கு பூஜை 16 ஆம் ஆண்டாக இராசி அகரம் மகளிர் மன்றத்தினர் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த பூஜையில் தீர்க்க சுமங்கலியாக பெண்கள் இருக்க வேண்டியும், கல்வி, தொழில், குழந்தை பாக்கியம், மற்றும் பல்வேறு நன்மைகள் வேண்டி இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அகரம் வெள்ளாஞ் செட்டியார் சங்கத் தலைவர் P.A.S கணேசன், மகளிர் மன்றத் தலைவி திருமதி. கோமதி கோவிந்தராஜ், துணைத்தலைவி திருமதி. சங்கீதா பாலகிருஷ்ணன், செயலாளர் திருமதி.கீர்த்தனா குப்புராஜ், பொருளாளர் திருமதி. திவ்ய பிரியா, செங்கோட்டுவேல், துணைச்செயலாளர் ராகவி செந்தில்குமார், மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் முன்னின்று நடத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story