வீட்டிலிருந்த 16 பவுன் நகை திருட்டு

வீட்டிலிருந்த 16 பவுன் நகை திருட்டு
நகை திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (48). இவரது சித்தி அன்ன புஷ்ப மேரியை கண்ணன் பராமரித்து வருகிறார். அன்ன புஷ்ப மேரியின் 16 பவுன் நகைகள் கண்ணன் வீட்டு பீரோவில் இருந்தன. நேற்று முன்தினம் கண்ணன் பீரோவை திறந்து பார்த்தபோது 16 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் அளித்த நிலையில் நேற்று வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Next Story