ராயல் இன்டர்நேஷனல் பள்ளி  16வது ஆண்டு விளையாட்டு விழா

ராயல் இன்டர்நேஷனல் பள்ளி  16வது ஆண்டு விளையாட்டு விழா
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி  16வது ஆண்டு விளையாட்டு விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி 16வது ஆண்டு விளையாட்டு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. ஒலிம்பிக் ஜோதியை எஸ்.ஐ. நடராஜன் ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை எஸ்.ஐ. நடராஜன் ஏற்றுக்கொண்டார். மாணவ, மாணவியர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே, யோகா, ஏரோபிக்ஸ், கோலாட்டம், பிளாஸ்டிக் வளையம், லெசிம், பிரமிடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வாலிபால், கிரிக்கெட், கபாடி, கோ.கோ., ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், உள்ளிட்ட பல தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.ஐ.நடராஜன், பள்ளியின் செயாளர் முருகேசன், பொருளர் கவிதா ஆனந்தன், முதல்வர் ராஜஸ்ரீ,  ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் ஸ்ரீவாரி அறக்கட்டளை உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story