ரயில் நிலையத்தில் 16 கிலோ குட்கா பறிமுதல்

X
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த புருலிய (மேற்குவங்காளம்) to திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் மருதராஜ், மணிமாறன், மதன்ராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி செல்வது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

