திருமாநிலையூர்.-ரூ 162 கோடியில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
திருமாநிலையூர்.-ரூ 162 கோடியில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில்புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் ,முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 18,332 பயனாளிகளுக்கு ரூபாய் 162 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏக்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story




