கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 17 ஆண்டுகள் சிறை
Dindigul King 24x7 |30 Aug 2024 2:32 AM GMT
கொடைக்கானலில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை, ரூ.7000 அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கும் உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு கற்பழித்த வழக்கில் தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் வயது 23 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் முயற்சியால் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், புருஷோத்தமனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story