நாகர்கோவிலில் திருமணமான 17 நாட்களில் புது பெண் மாயம்

நாகர்கோவிலில் திருமணமான 17 நாட்களில் புது பெண் மாயம்
X
கன்னியாகுமரி
நாகர்கோவில் அருகே சரலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவர். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதி சேர்ந்த பிரியா (25) என்பவருக்கும் கடந்த 10- 2 - 2025 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் பிரியா தனது கணவர் வீடான சரலூரில் வசித்து வந்தார்.      இந்த நிலையில் நேற்று 27ஆம் தேதி காலை 11 மணியளவில் மணிகண்டன் வழக்கம் போல் வேலை சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தபோது  பிரியாவை காணவில்லை. இதை அடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் பிரியா குறித்து தகவல் கிடைக்காததால்,  கோட்டாறு காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.      போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் பிரியா திருப்பூர் சென்று இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரியாவின் பெற்றோர் திருப்பூரில் உள்ளனர். பெற்றோரை பார்க்க சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். அவரை மீண்டும் நாகர்கோவில் அழைத்து வர உள்ளதாக அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story