பரமத்தி வேலூரில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்.

X
Paramathi Velur King 24x7 |29 Aug 2025 7:03 PM ISTபரமத்தி வேலூரில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
பரமத்திவேலூர், ஆக.29: பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 11 ஆயிரத்து 550 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.221.79-க்கும், குறைந்தபட்சமாக 198.99-க்கும், சராசரியாக ரூ.219.79-க்கும் ஏலம் போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ஒன்று ரூ.186.21–க்கும், குறைந்தபட்சமாககிலோ ஒன்று ரூ.140.10-க்கும்,சராசரியாக கிலோ ஒன்று ரூ.175.88-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.16 லட்சத்து 18 ஆயிரத்து 295-க்கு ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் வியாழக்கிழமை நடந்த ஏலத்திற்கு.8 ஆயிரத்து 73 கிலோ தேங்காய் பருப்பு கொண்டுவரப்பட்டது.இதில் அதிகபட்சமாககிலோ ஒன்று ரூ 223.30-க்கும் குறைந்தபட்சமாக ரூ 216.88-க்கும், சராசரியாக ரூ 220.61-க்கும் ஏலம் போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.215.60-க்கும், குறைந்த பட்சமாக கிலோ ஒன்று ரூ.168.88-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.213.69-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.17 லட்சத்து 80 ஆயிரத்து 206-க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
Next Story
