விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: வரும் 18 ஆம் தேதி நடைபெறும்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: வரும்  18 ஆம் தேதி  நடைபெறும்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.


விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18.06.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story