உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மணமேல்குடியில் 18ம் தேதி நடக்கிறது!
Pudukkottai King 24x7 |14 Sep 2024 3:52 AM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து கள ஆய்வு மேற்கொள்ளும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 18ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 2.30 மணிக்கு நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை கலெக்டரிடம் அளித்து பயன்பெறலாம். இத்தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story