ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

X
திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீவெக்காளியம்மன் திருக்கோயிலில் 32 ஆம் ஆண்டு ஆடி 18 திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில், பெண்கள், ஆண்கள், குழந்தைகளை சுமந்த படியும், சிறுவர் சிறுமியர் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார். திண்டுக்கல் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இராணி மங்கம்மாள் காலனி ஆட்டோ நண்பர்கள் செய்திருந்தனர்.
Next Story

