டிசம்பர் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்டவாரம் - திருவாரூட் மாவட்ட ஆட்சியர்

X
டிசம்பர் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்டவாரம்
டிசம்பர் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது
திருவாரூரில் டிசம்பர் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சி மொழி சட்டவாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணை வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது . அரசு அலுவலகங்களுக்கு ஆட்சி மொழி சட்டம், வரலாறு குறித்தும், பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சி அளித்தும், இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் ,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . ஆட்சிமொழி சட்டவாரத்தினை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story
