அரசால் தடை செய்யப்பட்ட 1.864 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து

X
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 1.864 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று 18.07.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் லட்சுமணன் 49/25 த/பெ செல்வம், அண்ணாநகர், குன்னம், பெரம்பலூர். என்பவர் தனக்கு சொந்தமான அம்மன் மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மேற்படி எதிரியை கைது செய்து குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் (1-கிலோ), 2.விமல் பாக்கு (647 கிராம்) 3.V1-பான் மசாலா (247 கிராம்) என மொத்தம்- 1.864 கிலோ கிராம் ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

