வடக்கு பாளையத்தில் 19 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி திருட்டு. காவல்துறையினர் விசாரணை.
Karur King 24x7 |9 Sep 2024 1:27 PM GMT
வடக்கு பாளையத்தில் 19 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி திருட்டு. காவல்துறையினர் விசாரணை.
வடக்கு பாளையத்தில் 19 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி திருட்டு. காவல்துறையினர் விசாரணை. வடக்கு பாளையத்தில், சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு, அடுத்த அடுத்த வீடுகளில் நடந்த திருட்டு சம்பவத்தில்19 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு சம்பவத்தல் காவல்துறையினர் விசாரணை. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வடக்குபாளையம் அருகே அமைந்துள்ள குமரன் பார்க் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் தெரு மின் விளக்குகள் குறைவாக உள்ளதால், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி கேமராவை பாதுகாப்புக்காக வைத்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் இல்லாத நேரமாக நேற்று இரவு சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு, அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். இதில் ஹரிஹரசுதன் என்பவர் வீட்டில் 11 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி, 1 லட்ச ரூபாய் ரொக்கமும், சுரேஷ் என்பவர் வீட்டில் 8 பவுன் தங்க நகை மற்றும் பானுமதி என்பவர் வீட்டில் 15,000 ரூபாய் ரொக்கம் என மொத்தம் 19 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி, 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு அடுத்தடுத்து 3 வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story