ரேசன் கார்டு 2 வருடமாக நிலுவை தம்பதி புகார்

ரேசன் கார்டு 2 வருடமாக நிலுவை தம்பதி  புகார்
குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பதியர் ரேசன் கார்டு பெற விண்ணப்பம் செய்து இரண்டு ஆண்டுகள ஆகியும், கார்டு வழங்காததால் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் ஏரித்தெருவில் வசிப்பவர்கள் இந்திராணி, சரவணன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகி, தனிக்குடித்தனம் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டி, 2022, அக். 29ல் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதுவரை புதிய ரேசன் கார்டு கிடைக்கபெறாமல் இருந்து வருகிறது. இது போல் பலரது விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலையில், கடும் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இனியாவது புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்த நபர்களுக்கு விரைவில் புதிய ரேசன் கார்டு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story