சாலை விபத்தில் மூதாட்டி பலி இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

சாலை விபத்தில் மூதாட்டி பலி  இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு  2 ஆண்டுகள் சிறை தண்டனை
சங்ககிரி: சாலை விபத்தில் மூதாட்டி பலி: இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு....
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் பரபரப்பு.... சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பிட் }செட்டிப்பட்டி, சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மனைவி குப்பாயி (75). அவர் அப்பகுதியில் உள்ள வாரசந்தைக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியதில் பலத்த காயமைடந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகன ஓட்டுநர் அசிராமணி கிராமம், குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் சதீஸ் (38) என்பவரை கைது செய்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு குற்றம்சாட்டப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story