இரு தரப்பு மோதல்: 2 பேர் கைது

கைது
ரிஷிவந்தியம் அருகே உள்ள இளையனார்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 44; இவரது உறவினர் ராஜேந்திரன். இருவருக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 31ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார், 7 பேர் மீது வழக்குப் பதிந்து ராஜேந்திரன்,48; கோவிந்தன், 44; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story