காங்கேயம் அரசு கலைக்கல்லூரி மாணவன் 2ம் இடம் பிடித்து சாதனை

X
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் . இந்த போட்டியானது சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் காங்கேயம் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஜெயராமன் ஜூனியர் 53 கிலோ எடை பிரிவில் 150 கிலோ எடை தூக்கி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை பிடித்தார். இவர் அடுத்த வரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். பளு தூக்கு போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி மாணவன் ஜெயராமை கல்லூரி முதல்வர் நசீம் ஜான் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

