ஆட்டோ - டெம்போ மோதல் 2 டிரைவர்கள் படுகாயம்

ஆட்டோ - டெம்போ மோதல் 2 டிரைவர்கள் படுகாயம்
படுகாயம்
உளுந்துார்பேட்டை அருகே ஆட்டோ மீது மினி டெம்போ மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முருகதாஸ், 21; டிரைவர். இவர் நேற்று காலை, மினி டெம்போவில் காலி பால் கேன்களுடன் தியாகதுருகத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி மினி டெம்போவை ஓட்டி வந்தார். 11:15 மணியளவில் ஒலையனுார் அருகே போது, கடலுார் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமதுஅலி, 42; என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மினி டெம்போ மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இரு வாகனங்களும் கவிழ்ந்தன. விபத்தில் முருகதாஸ், முகமது அலி ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story