விஷச்சாராயம் விற்ற 2 பேருக்கு 'குண்டாஸ்'

விஷச்சாராயம் விற்ற 2 பேருக்கு குண்டாஸ்
குண்டாஸ்
கெங்கவல்லி: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமசேஷபுரத்தை சேர்ந் தவர் சிவசந்திரன், 36. இவர் பைக்கில், 'டோர்' டெலிவரியாக சாராயம் விற்ற வீடியோ பரவி யதால், கடந்த ஜூன், 21ல் தலைவாசல் போலீசார் கைது செய் தனர். அவரிடம் விஷ சாராயம் பறிமுதல் செய்தனர். அவர் மீது சாராயம் விற்பனை, கடத்தல் என, 10 வழக்குகள் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார். இதைய டுத்து ஆத்துாரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த சுரேஷ், சிவசந் திரன், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சுரேஷ் மீது கொலைவழக்கு உள்பட, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 51வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே, 2012, 2013, 2015ம்ஆண்டுகளில் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்'என்றனர்.
Next Story